என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்டர் அதிகரிப்பு"
- தீபாவளி பண்டிகையையொட்டி, கைத்தறி நெசவு ஆர்டர் அதிகரித்துள்ளது.
- விற்பனை அதிகரிப்பால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஆர்டர் கிடைத்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கைத்தறி நெசவு கூடங்கள் உள்ளன.இத்தொழிலை நம்பி நெசவு செய்பவர்கள், விற்பனையாளர்கள், என நேரடியாகவும், மறைமுகமாகவும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, கைத்தறி நெசவு ஆர்டர் அதிகரித்துள்ளது.
இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் கூறியதாவது :-
தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் 20 கோடி ரூபாய்க்கும், தனியார் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் ஆர்டர் கிடைத்தது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் வரும் ஆர்டர் வகைகள் அனைத்தும் கோ ஆப்டெக்ஸ் மூலம் விற்கப்படுகிறது. அங்கு தள்ளுபடியில் விற்பனை நடைபெறும் போது, அதன் விலை குறைவாக கிடைக்கும். இதனால் விற்பனை அதிகரிக்கும்.
இதன்மூலம் எங்களுக்கு உற்பத்திக்கான ஆர்டர் அதிகமாக கிடைக்கும். தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். வருவாய் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனை வரவேற்கத்தக்கது.
தற்போது நூல் விலை குறைந்துள்ளது. ஒரு தரமான பட்டு சேலை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்க்கு எடுக்கலாம். விலை குறைவாக கிடைப்பதால், ஏழைகள், சாதாரண நடுத்தர மக்கள் முதல் கல்லுாரி மாணவிகள் வரை அதிக அளவில் வாங்குகின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.
விற்பனை அதிகரிப்பால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஆர்டர் கிடைத்துள்ளது. கோவை, திருப்பூரில், வெண்பட்டு, கோரா பேஷன், டை அண்டு டை, பியூர் காட்டன் உள்ளிட்ட வகை ஆடைகளை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.இவ்வகை சேலைகள் பல டிசைன்களில் கிடைப்பதால் வசதி படைத்தவர் கூட வாங்கி உடுத்துகின்றனர். இவ்வாறு ஜெகநாதன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்