search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனைகள்"

    • தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகள் பணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை.
    • நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகமெங்கும் ஏழை, எளிய பொதுமக்கள் தங்களுடைய நோய்களுக்கான மருத்துவத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் மேற்கொள்கிறார்கள்.

    நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு ஏழை, எளிய மக்கள் பெரிதும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் இவ்வகை நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களும், மருந்து மாத்திரைகளும் விலை அதிகம். பொருளாதார ரீதியாக சிரமப்படும் ஏழை, எளிய மக்களால் அவற்றை வாங்க இயலாது.

    இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளை நாடும் இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பல்வேறு மருந்துகள் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் நீங்கள் வேண்டுமென்றால் வெளியில் வாங்கிகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

    அவ்வகை மருந்தின் விலை தனியார் மருந்தகங்களில் மிக அதிகமாக இருக்கிறது. அவற்றை பொதுமக்களால் வாங்க இயலாமல் நோயுடன் போராடும் அவல நிலைதான் ஏற்படுகிறது. இலவசமாக மருத்துவம் பார்த்துகொள்ள வாய்ப்பிருந்தும் அதனால் பயனில்லாமல் போவது கொடுமையிலும், கொடுமை.

    விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும். ஆனால் ஒருசில மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். இருந்த பொழுதிலும் அரசு மருத்துவனைகளின் நிர்வாகிகள் அலட்சியமாக இருப்பது, மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும், தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு, வழிவகை செய்ய வேண்டும். மக்கள் உடல் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையாக தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். ஆகவே மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான மருத்துவத்தை முழமையாக அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×