என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இயேசு உருவம்"
- சிலுவையின் கீழ் வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேங்கி இருந்தது.
- குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்தநபரின் வீட்டில் குவிந்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பாரத் நகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் தனது வீட்டில் இயேசு சிலுவை ஒன்றை சுவற்றின் மீது மாட்டி வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி இவரது வீட்டின் சுவர் முழுவதும் எண்ணெயாக காணப்பட்டது. எப்படி இங்கு எண்ணெய் வந்தது. யாரும் சுவற்றில் எண்ணெயை தடவாதபோது இது எப்படி என யோசித்தார்.
தொடர்ந்து வீட்டில் மாட்டியிருந்த இயேசு சிலுவையை உற்று நோக்கினார். அப்போது சிலுவையில் இருந்து தேங்காய் எண்ணெய் வழிந்ததாக தெரிகிறது. இதனை கண்டதும் ஆச்சரியம் அடைந்தார்.
உடனே சிலுவையின் கீழ் ஒரு பாத்திரத்தை வைத்துள்ளார். பின்னர் மறுநாள் பார்த்தபோது அந்த சிலுவையின் கீழ் வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேங்கி இருந்தது. இதனால் அவருக்கு, ஆச்சரியமும் உண்டானது.
இதற்கிடையே இயேசு உருவத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் வடிந்த தகவல் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் வேகமாக பரவியது.
இதையடுத்து குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்தநபரின் வீட்டில் குவிந்தனர். அவர்கள் தேங்காய் எண்ணெய் வடிந்த இயேசு சிலுவை உருவத்தை அதிசயத்துடன் பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து செல்லும்போது தேங்காய் எண்ணெயும் வாங்கி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்