search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்காள கவர்னர்"

    • கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர்- மம்தா பானர்ஜி.
    • ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தது.

    மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஆனந்த போஸ்க்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தால் கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கவர்னர் மாளிகை கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும், கவர்னர் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு இன்று விசாரைணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சுட்டிக்காட்டியதற்கு ஆளுநரின் வழக்கறிஞர் உரிய நடவடிக்கை எடுத்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என நீதிபதி கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.

    செய்திகள் வெளியான அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் குறிப்பிட்டுள்ள செய்திகளை வெளியிட்டவர்களின் பெயர் மனுவில் இடம் பெறவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு ஆளுநரின் வழக்கறிஞர், அது தொடர்பான விவரங்களை இணைத்து மனுதாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்தார்.

    கடந்த மே மாதம் 2-ந்தேதி ஆளுநர் மாளிகை ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸக்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொத்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியது.

    இதனைத் தொடர்நது ஜூன் 27-ந்தேதி மம்தா பானர்ஜி அவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானது. அரசியலமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவின்படி, ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது.

    • ராஜ்பவனில் இருந்து போலீசார் வெளியேற வேண்டும் என்றார் கவர்னர்.
    • முதல் மந்திரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இவருக்கும் கவர்னர் ஆனந்தபோசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் இருந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ராஜ்பவனுக்குச் சென்றார். ஆனால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அப்பகுதியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை எனக்கூறி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தற்போதைய பொறுப்பாளர் மற்றும் அவரது குழுவினர் இருப்பது எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நம்புவதற்கு எனக்கு காரணங்கள் உள்ளன.

    ராஜ்பவனில் கொல்கத்தா காவல் துறையிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

    போலீசார் அனைவரும் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என கவர்னர் ஆனந்த போஸ் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
    • சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    ஆனால் சிசிடிவி காட்சிகள் 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை நேற்று தெரிவித்திருந்தது.

    இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக வேண்டுகோள் விடுக்கும் முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னரை மாளிகையில் இன்று காலை சிசிடிவி காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இன்று காலை பொதுமக்களுக்கு சிசிடிவி வீடியோ காட்சியகள் திரையிடப்பட்டன.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தில் "92 பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளை பார்வையிட வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் சிலர்தான் சிசிடிவி காட்சிகளை பார்க்க வந்தனர். இந்த விவகாரத்தில் மக்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது." எனத் தெரிவித்துள்ளது.

    அந்த பெண் ஏப்ரல் 24-ந்தேதி மற்றும் மே 2-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் கவர்னர் மாளிகையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    மே 2-ந்தேதி மாலை 5 மணியளவில் வடக்குப் பகுதியில் உள்ள முதன்மை வாசல் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் திரையிடப்பட்டன.

    பிரதமர் மோடி மே 3-ந்தேதி மேற்கு வங்காளத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு முன்பாக மே 2-ந்தேதி கவர்னர் மாளிகையில் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார்.
    • காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பதாவது:-

    பெண் புகார் கொடுத்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மேற்கு வங்காள மாநில போலீசார் விசாரணையின் கீழ் சிசிடிவி காட்சிகளை கவர்னர் மாளிகை வழங்காது.

    பொதுமக்கள் இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால், முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னர் மாளிகையில் வைத்து சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்படும். இது நாளை காலை நடைபெறும்.

    அரசியல்வாதி மம்தா பானர்ஜி மற்றும் அவரது காவல்துறையைத் தவிர, சிசிடிவி காட்சிகளை மேற்கு வங்கத்தில் உள்ள எந்த குடிமகனும் பார்க்க முடியும் என்று ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் கடந்த 3-ந்தேதி முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    • கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.
    • கவர்னர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு எதிரான தாராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் சில அரசியல் சக்திகளால் என் மீது அடிக்கடி வரும் இழிவுபடுத்தல்களை நான் வரவேற்கிறேன்.

    ஆனால் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும் நான் எடுக்கும் உறுதியான முயற்சிகளில் இருந்து இந்த அபத்தமான நாடகங்கள் எதுவும் என்னைத் தடுக்கப் போவதில்லை.

    கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.

    உங்கள் ஆயுதக் கிடங்கில் இருந்து அனைத்து ஆயுதங்களையும் வெளியே கொண்டு வாருங்கள். எனக்கு எதிராக பயன்படுத்துங்கள். நான் தயாராக இருக்கிறேன். எனது வங்காள சகோதர சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதைக்காக எனது போராட்டத்தை தொடர்வேன்.

    இவ்வாறு கவர்னர் ஆனந்த போஸ் கூறியிருந்தார்.

    ஆனால் இளம்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தொழில்துறை மந்திரியுமான சஷி பஞ்சா கூறுகையில், 'இந்த பாலியல் குற்றச்சாட்டு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் கவர்னர் மாளிகைக்கு உள்ளேயே நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை' என்று கூறினார்.

    ஒரு கவர்னர் மீது இத்தகைய புகார் இதுவரை நடந்ததில்லை எனக்கூறிய பஞ்சா, இது நிச்சயமாக கவர்னர் பதவியின் மாண்பை இழிவுபடுத்துவதாகவும், இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே இளம்பெண் மீது தவறாக நடந்து கொண்டதற்காக கவர்னர் ஆனந்த போசுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கவர்னர் மாளிகையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் நேற்று (நேற்று முன்தினம்) வெளியே வந்து, கவர்னரின் பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன். அந்த பெண்ணின் கண்ணீர் என் நெஞ்சை நொறுக்கி விட்டது.

    கவர்னர் மாளிகையில் இனி வேலை செய்ய பயமாக இருப்பதாக கூறி அந்த பெண் அழுது கொண்டே வெளியே சென்றார். தான் அடிக்கடி அழைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

    பா.ஜனதாவினர் சந்தேஷ்காலி குறித்து பேசுவதற்கு முன், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண்ணிடம் கவர்னர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இவர்கள் தான் நம் தாய், சகோதரிகளின் மானம் பற்றி பேசுகிறார்களா?

    கவர்னர் மாளிகைக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    கவர்னர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது.
    • வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன்.

    மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் "வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன். தேர்தலில் இந்த இரண்டிற்கும் முடிவு கட்ட வேண்டும். நான் மக்களுக்கான இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார்.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அம்மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ்க்கும், மாநில அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரித்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உயர்க்கல்வி முறையை அழிக்க முயற்சி செய்கிறார்- மேற்கு வங்காள மந்திரி
    • நள்ளிரவுக்குள் நடவடிக்கையை பார்க்கலாம்- ஆளுநர்

    மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும், ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்-க்கும் இடையில் அதிகாரம் குறித்து மோதல் இருந்து வருகிறது.

    ஆளுநர் பல்கலைக்கழங்களுக்கு இடைக்கால துணைவேந்தர்களை நியமித்ததில் இருந்து இந்த மோதல் பெரியதாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஆளுநர் செயல்பட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன், ஆளுநருக்கு துணை போகும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதிக்கு முட்டுக்கட்டை போடப்படும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியிருந்தார்.

    ஊழல் இல்லாத பல்கலைக்கழகம் என்பதை உறுதிப்படுத்துவதுதான் என்னுடைய பணி என போஸ் பதில் அளித்திருந்தார்.

    இந்த நிலையில், மேற்கு வங்காள கல்வித்துறை மந்திரி பிரத்யா பாசு, ''உயர்க்கல்வி முறையை அழிக்க முயற்சி செய்கிறார். பல்லைக்கழகங்களில் ஆளுநர் பொம்மை ஆட்சி நடத்துகிறார்'' என ஆளுநர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டு ரகசிய கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஒன்றை மத்திய அரசுக்கும், மற்றொன்றை மாநில அரசுக்கும் அனுப்பியுள்ளார்.

    இதை உறுதி செய்த ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ''இரண்டு ரகசிய கடிதங்களில் கைழுத்திட்டுள்ளார். அந்த கடிதங்கள் குறிப்பிட்டுள்ள விசயங்கள் தங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்'' என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

    தலைமை செயலாளரை அழைத்து சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

    மந்திரி பேச்சு குறித்து ஆளுநரிடம் பத்திரிகையாளர் ஒரு நிகழ்ச்சியின்போது எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் ''நள்ளிரவு வரை காத்திருங்கள். என நடவடிக்கை என்பது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்'' என் குறிப்பிட்டார்.

    ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்த சில நிமிடங்களில், கல்வித்துறை மந்திரி பிரத்யா பாசு ''நள்ளிரவு வரை பார்க்கவும், நடவடிக்கை பார்க்கவும். எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! நகரில் புதிய காட்டேரி! மக்களே உங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய புராணங்களில் கூறப்படும் அசுரன் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி.ஆனந்த போஸ். இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆனந்த போஸ் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுக்கு செல்கிறார்.

    ×