search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 திருவிளக்கு பூஜை"

    • உலக அமைதி வேண்டி பிரகதீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • 108 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வீடூர் பகுதியில் பிரகன் நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உள்ள சன்னதி யில் தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவர் பாபு ஆலோசனைப்படி உலக அமைதி வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கு தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்ட மைப்பின் விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் அம்மன் கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செந்தில், செந்தில் குமார், மணி கண்டன், கருணாநிதி, சங்கர், பாபு,ஆனந்தகுமார், தயானந்தம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். 

    ×