search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர்"

    • தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்
    • மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாடு அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர்கள் என்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்; நாகரீகமற்றவர்கள் எனக்கூறி எங்கள் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக தலைவருடன் ஆலோசித்துவிட்டு மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்வோம். திமுக-வில் என்ன அரசியல் நடக்கிறது என்பது பற்றி கவலைப்பட ஒன்றிய அமைச்சர் யார்? பிரச்னையை திசை திருப்பும் செயல் இது

    தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரித்ததாக, திசை திருப்பும் விதமாக தர்மேந்திர பிரதான் பேசி வருகிறார். தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. இதனை முதலமைச்சர் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டு எம்.பிக்களும் இவற்றுக்கு எதிராக இதே அவையில் கருத்தை பதிவு செய்து இருக்கிறோம், ஒன்றிய அமைச்சரை சந்தித்தும் விளக்கமளித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க தங்கார் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
    • முதன்முறையாக அவை ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பு, அவையின் தலைவர் ஜகதீப் தங்கார், பல்வேறு எம்.பி.க்களின் பெயரை குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேலவை இன்று கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேலவை இன்று 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி காலை 11.50 மணியளவில் முதலில் அவை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க தங்கார் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    முதன்முறையாக அவை ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பு, அவையின் தலைவர் ஜகதீப் தங்கார், பல்வேறு எம்.பி.க்களின் பெயரை குறிப்பிட்டார்.

    இதன்படி எம்.பி.க்கள் ராகவ் சத்தா, இம்ரான் பிரதாப்கார்ஹி, சக்தி சின்ஹ் கோஹில், குமார் கேத்கர் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரது பெயரை அவர் குறிப்பிட்டு, இதுபோன்ற அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்து பேசினார்.

    2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

    இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ந்தேதி நடைபெறும்.

    இதுபற்றி அவையில் தங்கார் கூறும்போது, திட்டமிட்டே உள்நோக்குடன் அவையை முடக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன. அவையை நடத்துவதற்கான வழி இதுவல்ல.

    ஏற்கனவே நாம் நிறைய நேரம் வீணடித்து விட்டோம். இதுபோன்ற இடையூறுகள் அவையில் ஏற்பட்டால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாவேன் என கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் கார்கேவை பற்றி தங்கார் குறிப்பிடும்போது, அவையில் உங்களுக்கான உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள். ஒவ்வொரு முறையும் நெருக்கடிக்கு உட்பட்டு அவை தலைவர் செயல்படுகிறார் என கூறி வருகின்றீர் என கூறினார்.

    ×