search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைப்பு குழு"

    • அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம்.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்துள்ளார்.

    அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

    அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு கழகத் தலைவருக்கும் - தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

    "ஒருங்கிணைப்புக்குழு" பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

    அமைச்சகர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படுகிறது.
    • 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள்.

    தாராபுரம் :

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் பகுதி நேர சிறப்பாசிரியர்க ளை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதி நேர சிறப்பா சிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது:- அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2012ல் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி என 8 பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் வீதம், மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படு கிறது. தொடக்கத்தில் 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள். தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தி.மு.க., தெரிவித்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

    கடந்த 11 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

    ×