search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல் தொழில்நுட்ப அணி"

    • பேரூர் நிர்வாக பணி, சமூக வலைதளப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
    • விருப்ப மனு நேரில் கொடுத்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றார்கள்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாக பணி, சமூக வலைதளப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் திருப்பூரில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை முன்னிலை வகித்தார்.

    மேற்கண்ட பொறுப்புகளுக்கு விருப்ப மனு நேரில் கொடுத்தவர்களும், இணையவழி மூலமாக விண்ணப்பித்தவர்களும் நேர்காணலில் பங்கேற்றார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணியளவில் திருப்பூர் “கலைஞர்அறி வாலயம்”, “தளபதி அரங்கில்” நடைபெறஉள்ளது.
    • விருப்பமனு நேரில் கொடுத்துள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரு மான இல.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல்தொழில்நுட்ப அணியின் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில்நிர்வாகப் பணி, சமூக வலைதளப் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகியபொறுப்புகளுக்கான நேர்காணல் நாளை 8-ந்தேதி காலை 10மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான திருப்பூர் "கலைஞர்அறி வாலயம்", "தளபதி அரங்கில்" எனது (இல.பத்மநாபன்)தலைமையில், தலைமை கழக உடுமலை ப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளருமான அ.தமிழ்மறை முன்னிலை யில் நடைபெறஉள்ளது.

    மேற்கண்ட பொறுப்புக ளுக்கு விருப்ப மனு நேரி ல்கொடுத்து ள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்த வர்களும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ள வேண்டு மாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×