என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தராசு ஷியாம்"
- சிவில் வழக்கில் நிவாரணம் கிடைத்தால் அவர் முயற்சி செய்து பார்க்கலாம்.
- பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதுதான் ஓ.பி.எஸ்.சின் நிலைப்பாடாகும்.
அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்கிற கணக்கிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் விமர்சகரான தராசு ஷியாமிடம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். ஒரு வேளை வெற்றி பெற்றால் அவரால் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர முடியுமா? அவரது தற்போதைய நடவடிக்கைகள் பலன் அளிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்தால் இரட்டை இலை சின்னத்தை இப்போதைக்கு பெற முடியாது. ஏனென்றால் உயர்நீதிமன்றத்தில் தடை இருக்கிறது. சிவில் வழக்கில் நிவாரணம் கிடைத்தால் அவர் முயற்சி செய்து பார்க்கலாம்.
அப்போதும் எதிர் தரப்பு மேல்முறையீட்டுக்கு போகும். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதுதான் ஓ.பி.எஸ்.சின் நிலைப்பாடாகும். அது வெற்றியைத் தேடித் தராது. மேலும் அவரது அணியில் இருந்து பலர் தாய் கட்சியான அ.தி.மு.க.வுக்கு திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து.
- ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும்.
சென்னை:
அ.தி.மு.க. கட்சி சின்னம், கொடி அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து உரிமையை மீட்போம் என்று கூறி வருகிறார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னமும் தங்களுக்கு கிடைக்கும் என்று கூறி உள்ளார். அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி தராசு ஷியாமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து. தற்காலிகமாக அதை பயன்படுத்தும் உரிமையை மட்டும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குகிறது. அதற்கும் சில விதிமுறைகளை வைத்துள்ளது.
அ.தி.மு.க.வில் பிரச்சினைகள் எழுந்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் கோர்ட்டில் வழக்காடியதில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு இரட்டை இலை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருப்பது ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் மூல வழக்கை அடிப்படையாக வைத்து தெரிவித்து இருப்பார். ஆனால் அந்த வழக்கும் அவருக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அப்போதைய சூழ்நிலை வேறு.
அப்போதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்த போது தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் கேட்டுத் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. அதைதொடர்ந்து தற்காலிகமாக பயன்படுத்தும் உரிமை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இனி மூல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்து இடைக்கால தடை வாங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதலாம். அப்படியானாலும் இருதரப்புக்கும் சாதகமாகவே இருக்கும். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசின் அமைச்சர் துறைகளில் மாற்றம் ஏற்படும்போது அதற்கான காரணத்தை ஜனாதிபதிக்கு பிரதமர் கூற மாட்டார்.
- ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு, கவர்னரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு கடமை இருக்கிறது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார். அதற்கான பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பினார்.
ஆனால் அந்த பரிந்துரையில் சில விளக்கங்களை கேட்டு அதை அரசுக்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
மத்திய அரசின் அமைச்சர் துறைகளில் மாற்றம் ஏற்படும்போது அதற்கான காரணத்தை ஜனாதிபதிக்கு பிரதமர் கூற மாட்டார். அதுபோல்தான் மாநிலங்களிலும் உள்ளது.
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. அப்படி வரும்போது 'சட்டத்தின் கீழ், சட்டத்தின் பார்வையில், சட்டத்தின் முன்' ஆகிய 3 கூறுகள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் கவர்னர் செய்திருப்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல். காரணம், அரசியல் சாசனத்தில் அப்படி எதுவுமே கூறவில்லை.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு, கவர்னரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு கடமை இருக்கிறது. அதற்காக அவர் துறை மாற்றத்திற்கான தகவலை தெரிவிக்கிறார். எப்போதுமே அமைச்சர்களை பதவி பிரமாணம் செய்து வைக்கும்போது எந்தெந்த துறைக்கு இவர் என்று பதவி பிரமாணம் செய்து வைப்பது இல்லை.
அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். அதற்கு பிறகு என்னென்ன இலாக்காக்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதை முதலமைச்சர் முடிவு செய்து கவர்னருக்கு தெரிவிப்பார்.
கவர்னரின் ஒப்புதல் என்பது இதில் தேவையே இல்லை. கவர்னர் இப்போது செய்திருப்பது தேவையற்ற அரசியல் என்பதுதான் எனது கருத்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்