search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோம்பல் காமி"

    • இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    • போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களுடன் நேபாள் அணி வீரர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர்.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய நேபாளம் அணி 48.02 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. மழை பெய்ததால் ஓவர் குறைக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 23 ஓவரில் 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழைக்கு பிறகு ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களுடன் நேபாள் அணி வீரர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர். மேலும் நேபாள் அணியின் ஆல்ரவுண்டர் சோம்பல் காமி அவரது ஷூவில் விராட் கோலியின் ஆட்டோகிராபை வாங்கினார்.

    இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்த சோம்பல் காமி, விராட் கோலி கிரிக்கெட்டர் அல்ல, எமோசன் என தலைப்பு வைத்திருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    ×