search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை உயிரிழப்பு"

    • வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
    • ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வந்தவர் வினய் குண்டகாவி(வயது 38). இவர் டாக்டர் ஆவார். இவர் உப்பள்ளியில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். அவருடைய மனைவியும் டாக்டர் ஆவார்.

    வினயின் தந்தை வீரபத்ரய்யா. இவரும் டாக்டர். இவர் ஹாவேரி என்ற இடத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அங்கேயே சொந்தமாக ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலையில் திடீரென வினய் மயக்கம்போட்டு விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய மனைவி, வினயை பரிசோதனை செய்தார். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

    அவரும், அவரது பிள்ளைகளும் கதறி அழுதனர். வினய் இறந்துவிட்ட தகவல் அவருடைய தந்தை வீரபத்ரய்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட வீரபத்ரய்யா, மகன் இறந்த செய்தி கேட்டதும் பதற்றம் அடைந்தார்.

    சிறிது நேரத்தில் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். மயங்கி கீழே விழுந்தார். அவரை, ஆஸ்பத்திரியில் இருந்த சக டாக்டர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மகன் இறந்த செய்தி கேட்ட வீரபத்ரய்யா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • சொத்து பிரிப்பது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
    • வீட்டின் மாடியில் மயங்கி கிடந்த ஜான்சனை போலீசார் மீட்டு, திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணுத்தி அருகே உள்ள சிரக்காக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மகன் ஜோஜி(40) குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக அவருக்கும், மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

    அது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஜான்சன், அறையில் படுத்து தூங்கிய தனது மகன் ஜோஜி, மருமகள் லிஜி (34), பேரன் டெண்டுல்கர்(12) ஆகியோரை அறையில் வைத்து பூட்டி பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் அவர்கள் ஜோஜி உள்ளிட்ட 3 பேரும் உடல் கருகினர். அவர்களில் ஜோஜி, டெண்டுல்கர் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மகன் குடும்பத்தினரை உயிரோடு தீவைத்து எரித்த ஜான்சன் விஷம் குடித்தார். வீட்டின் மாடியில் மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டு, திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மகன் குடும்பத்தை உயிரோடு எரித்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஜான்சன், தீ வைத்ததில் படுகாயமடைந்த அவரது மருமகள் லிஜி ஆகிய இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜான்சன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மருமகள் லிஜி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×