search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லம்பள்ளி"

    • குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. ஸ்கேன் மிஷின் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த மாவட்ட நலப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் காலை முதலே இவர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரை இவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே கைதான இவர், ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் கர்ப்பிணி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்றும், பெண் குழந்தையாக இருந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.13 ஆயிரம் வசூலித்து வந்துள்ளதும் தகவல் வெளியாகி உள்ளது.

    முருகேசன் என்பவர் மருத்துவர் இல்லை என்றும் இவருக்கு கீழ் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.
    • விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பரிகம் காட்டுவளவு கிராமத்தில் தனியாக உள்ள புஷ்பாகரன் என்பவரின் விவசாயி வீட்டில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊராட்சிகளின் பணிகள் டி.எஸ்.பி. சரவணகுமார், ஏ.ஓ. கமலக்கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தருமபுரி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் திடீர் சோதனைக்கு சென்றனர். அப்போது மருத்துவக் குழு வருவதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.

    இந்தநிலையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வடிவேலுக்கு உதவிய தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கருவுற்ற பெண்களை காரில் அழைத்து வந்த டிரைவர் முருகன் ஆகிய இடைத்தரகர்கள் 2 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூர், பெங்களூர், பகுதிகளில் இருந்து வர வழைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட 15 பேரை மருத்துவக் குழுவினர் விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு, சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஏற்கனவே ஆணா, பெண்ணா என கண்டறிந்த சம்பவத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவருக்கு பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த 2 பேர் மூலம் கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய நினைக்கும் பெண்களை ஏற்கனவே கருவில் இருப்பது என்ன குழந்தை என்று கண்டறிந்து சென்ற கர்ப்பிணிப் பெண்களின் உதவியோடு கண்டறிந்தனர்.

    பின்னர் அவர்களை மாவட்டத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காத காட்டுப் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக திருவிழா, கல்யாணம், காதுகுத்து, நடக்கும் பகுதிகளை பார்த்து அப்பகுதியில் ஒரு வீட்டை தேர்வு செய்து, விசேஷத்திற்கு வந்தது போல் கணவர்கள் சம்மதத்துடன் அவர்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் வைத்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து உள்ளனர்.

    இதை கண்டறிய ஒரு நபரிடம் ரூ. 13 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். ஒரு பெண்ணை அழைத்து வந்தால் இடைத்தரகரான வனிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக கொடுத்து உள்ளனர். இதே பாணியில் தான் நேற்று வனிதாவும் முருகனும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பரியம் காட்டுவளவு கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் வீட்டில் அரங்கேற்றி உள்ளனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து வரவழைத்த பெண்களை வீட்டில் தரையில் படுக்க வைத்து ஸ்கேன் மெஷின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என 12 பேருக்கு கண்டறிந்து உள்ளார்.

    மேலாண்மை குழு வருவதை அறிந்த வடிவேலு ஸ்கேனிங் மெஷினுடன் சொகுசு காரில் தப்பி சென்றுள்ளார். பின்னர் வனிதாவும் டிரைவர் முருகனும் ஒரே காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போது பாலின தேர்வை தடை செய்யும் குழுவினரிடம் சிக்கிக் கொண்டனர்.

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் உடன் சேர்ந்து இத்தொழிலை தொடர்ந்து செய்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து தொப்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×