search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார பொதுக்கூட்டம்"

    • பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

    அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

    பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.

    • 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.
    • மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கின.

    பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகியதால் அந்த கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு செய்வதிலும் இந்தியா கூட்டணியில் சலசலப்பு காணப்படுகிறது.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்களால் பொதுவான குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க இயலவில்லை.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் முக்கிய நகரங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு முதல் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. அதுபோல முதல் பிரமாண்ட கூட்டத்தையும் அந்த நகரிலேயே நடத்த தீர்மானித்துள்ளனர். வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்று தெரிகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.

    இதன் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ×