என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிசிஏ"
- ஒரு நாளைக்கு சுமார் 115 விமானங்களின் சேவையை ரத்து செய்ய உத்தரவு
- விமான சேவைகள் நிறுத்தப்படும் வழித்தடங்களில் மற்ற நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும்
இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதத்தால் பயணிகள் பெரும் அவதியடைந்த நிலையில், முக்கிய வழித்தடங்களில் அதன் சேவைகளை 5 சதவீதம் குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 115 விமானங்களின் சேவையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக தேவை மற்றும் அதிக அதிர்வெண் கொண்ட வழித்தடங்களில் இண்டிகோவின் சேவையை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையை புதன்கிழமை (டிசம்பர் 10) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் ஏற்படும் மாற்றம், இண்டிகோவின் தினசரி விமான நடவடிக்கைகளைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இண்டிகோ விமான சேவைகள் நிறுத்தப்படும் வழித்தடங்களில் மற்ற நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும். இதன் உள்நாட்டு சந்தைப் பங்கு கிட்டத்தட்ட 65 சதவீதமாகும். தினசரி 2,300 விமானங்களை இயக்குகிறது. அவற்றில் 2,150 உள்நாட்டு விமானங்கள். மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இண்டிகோ நிறுவனம் கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- நேற்று 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 160 விமான சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டன.
- இன்று மும்பை, டெல்லி, பெங்களூருவில் இருந்து புறப்பட்ட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்திய விமான நிறுவனங்களில் ஒன்று விஸ்டாரா. இந்த நிறுவனம் விமானிகள் மற்றும் பணிப் பெண்கள் இல்லாத காரணத்தால் விமானங்களை ரத்து செய்து வருகிறது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்தலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். தினந்தோறும் இவ்வாறு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்பதால் டிஜிசிஏ (விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) தினசரி ரிப்போர்ட் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் அசௌகரியத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாமல் நேற்று மட்டும் விஸ்டாரா 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
ஏர்இந்தியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து விஸ்டாரா செயல்பட்டு வரும் நிலையில், விமானிகள் பிரச்சனை தொடர்பாக தற்காலிகமாக விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இன்று மட்டும் மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள், டெல்லியில் இருந்து புறப்பட்ட வேண்டிய 12 விமானங்கள், பெங்களூருவில் இருந்து புறப்படட வேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
- தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தகுதிபெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாயும், விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு விமான நிறுவனங்கள் வழக்கமாக வழங்கும் அறிக்கையின்போது ஏர் இந்தியா நிறுவனம் தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட நிலையில், விமானத்தை தகுதிபெறாத விமானிகளைக் கொண்டு இயக்கியது உறுதியானது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநகரம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் லண்டன் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
- ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டார்.






