search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் எச்சரிக்கை"

    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    எனவே, மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

    நேற்று மதியம் 1.15 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கோவை வால்பாறை, நெல்லை ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சை கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மணல்மேடு, நெல்லை காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 1 முதல் 5 செ.மீ மழை அளவு பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
    • கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    ராமேசுவரம்:

    தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்தின் தென் கடல் பகுதியில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென்று ஏற்படும் கடல் சீற்றமான கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலைமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் நீண்ட இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பூந்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில், தென் கடல் பகுதியான தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடல் சீற் றத்துடன் காணப்பட்டது.

    கரையோரம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ×