search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதய பிரச்சனை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • CPR பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
    • மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும்.

    இதய பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் சர்வ சாதாரணமாக வரும் பிரச்சனையாக மாறிவிட்டது. தவறான பழக்கவழக்கங்கள், முறையில்லாத உணவுமுறை மற்றும் உடல் உழைப்பு இல்லாத வேலை, உடல் பருமன், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

    அந்த வகையில் இதயம் தொடர்பான பிரச்சனையில் ஒன்று திடீரென்று இதயம் செயல்படுவது நின்று போவது. இவ்வாறு இதயம் செயல்படுவதில் திடீரென்று தடை ஏற்படுவது CPR எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தன்னிச்சையான ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவ உதவி கிடைக்கும் வரை மூளையின் செயல்பாட்டை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது. இதனை அறிந்துகொள்வது மிகவும் எளிமையான செயல்முறையாகும்.

    முதலில் நோயாளியை ஒரு சமமான மேற்பரப்பில் படுக்க வைத்து உங்கள் இரு கைகளையும் மார்பின் மையத்தில் வைத்து வழக்கமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

    மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும். ஒவ்வொரு அழுத்தத்திற்கும் பிறகு மார்பு இயல்பு நிலைக்கு சில நொடிகள் இடைவெளி கொடுக்க வேண்டும். இதன் பின்னர் வாயோடு வாய் வைத்து CPR பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    நாம் CPR பயிற்சியை சரியாக கொடுத்தால் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    உங்கள் கைகளை ஒன்றன் மீது ஒன்றாக இருக்குமாறு வைத்து விரல்களுக்குள் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மார்பின் மையத்தில் கைகள் வைக்கப்படும் அதே வேளையில் உங்களுடைய தோள்பட்டை கைகளுக்கு நேராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கைகளுக்கு சரியான அழுத்தம் கிடைக்காது.

    CPR பயிற்சியின் போது மூச்சுக்காற்றை உட்செலுத்தும் நிலை வந்தால் நோயாளியின் தலையை ஒரு கையில் பின்னால் சாய்த்து பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கன்னத்தை உயர்த்தி பிடித்துக் கொள்ள வேண்டும். இது நுரையீரலுக்கான காற்றுப்பாதை திறந்திருப்பதை உறுதி செய்கிறது. நீங்கள் 30 முறை மார்பில் அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்றால் மூச்சுக்காற்றை உட்செலுத்துவது 2 முறை பண்ணலாம்.

    BLS பயிற்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், டிராபிக் போலீஸ், தீயணைப்பு படையினர் என அனைவருக்கும் விழிப்புணர்வாக மருத்துவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    • ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது.
    • பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல.

    குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.


    பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

    சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

    சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

    கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.


    லோ இன் கலோரிஸ் என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டைலோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

    பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

    ×