search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் ஜெயசூர்யா"

    • புகார் கூறிய நடிகையிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
    • சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கையில் அம்பலமானது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

    அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகை களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபல நடிகர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரபல இயக்குனர்களான ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதியப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் நடிகை களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பிரபல நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் கூறிய நடிகையிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

    அவர் கோளஞ்சேரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாக்குமூலம்அளித்தார். காலை 11.30 மணி முதல் மதியம் வரை அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டிருக் கிறது. நடிகையிடம் பூட்டிய அறையில் வைத்து மாஜிஸ் திரேட்டு வாக்குமூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×