search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Super-8 Round"

    • சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது.
    • விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் -1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான், வங்காள தேசமும், குரூப் 2 பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கவும் இடம் பெற்றுள்ளன.

    சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு நடை பெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

    அமெரிக்க ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சவாலாக இருந்தது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் தான் நடக்கிறது. இங்குள்ள 'பிட்ச்கள்' சமமானதாக இருக்கும்.

    இந்திய அணி லீக் சுற்றில் அயர்லாந்து (8 விக்கெட்), பாகிஸ்தான் (6 ரன்), அமெரிக்கா (7 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. கனடாவுடன் மோத வேண்டிய ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப் பட்டது. தோல்வியை சந்திக்காத இந்திய அணி நம்பிக்கையுடன் ஆப் கானிஸ்தானை சந்திக்கும்.

    'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. அதேநேரத்தில் ஆப்கானிஸ் தானை சாதாரணமாக கருதிவிட முடியாது. அந்த அணி இந்த தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் கவனமுடன் விளையாட வேண்டும்.

    கடந்த 2 போட்டியிலும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமான 'சூப்பர் 8' சுற்றில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான குல்தீப் யாதவ் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வில்லை. அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அக்ஷர் படேல் அல்லது ஜடேஜா கழற்றி விடப்படலாம். முகமது சிராஜ் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். இதனால் அவரது நிலையும் கேள்வி குறியாக இருக்கலாம். அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக உள்ளனர்.

    பேட்டிங்கில் ரிஷப்பண்ட், கேப்டன் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். உலகின் முன்னணி பேட்ஸ்மேனான வீராட் கோலி இந்த தொடரில் ஜொலிக்க வில்லை. 3 ஆட்டத்திலும் சேர்த்து 5 ரன்களே எடுத்தார். ஐ.பி.எல்.

    போட்டியில் அதிரடியாக விளையாடியதால் வாய்ப்பை பெற்றார். தொடக்க வீரரான அவரது வரிசையில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. வெற்றி அணியே போதுமானது என்று கருத்தினால் மாற்றம் இருக்காது.

    ரஷீத்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி லீக் ஆட்டத்தில் உகாண்டா (125 ரன்), நியூசிலாந்து (84 ரன்) பப்புவா நியுகினியா (7 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்து இருந்தது.

    வெஸ்ட் இண்டீசிடம் (104 ரன்) மட்டும் தோற்றது.

    ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. ரகுமதுல்லா குர்பாஸ், இப்ராகிம் சர்தான் ஆகியோர் பேட்டிங்கிலும், பரூக்கி, ரஷீத்கான் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    • அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
    • வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.

    எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.

    நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.

    அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    ×