search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட்"

    • திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர்.
    • இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்த எதிர்க்கட்சிகள் மேற்குவங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் நிலவுவதாக விமர்சித்தனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிர்ந்து மேற்குவங்கத்தில் தலிபான் கலாச்சாரம் நிலவுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்தில் நடந்துள்ளது

    இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட தஜிமுல் இஸ்லாம் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

    திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் தனது காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் ஊருக்கு திரும்பிய போது அவள் தனது கணவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

    அந்த பணத்தை அப்பெண் கட்ட தவறியதால் தஜிமுல் இஸ்லாம் அப்பெண்ணை தாக்கியுள்ளார். தஜிமுல் இஸ்லாம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருணால் கஹோஷ் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். மேற்குவங்கத்தில் இத்தகைய சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்றும் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

    • அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் குற்றாவாளியை தேடி வருகிறது.

    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர்.

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் வயநாடு தொகுதியில் தனித்தனியாக போட்டியிடுவது அந்தக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆனி ராஜா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பெயரை உயர்த்தவில்லை.

    ராகுல் காந்தி இந்தத் தொகுதிக்கு எதுவும் செய்யாததால் வயநாடு மக்களுக்கு நான் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும், அது பெரிய விஷயமாக இருக்கும். தொகுதி மக்கள் மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அணுகக்கூடிய ஒருவர் தேவை என கூறுகிறார்கள்.

    வயநாடு தொகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ரெயில்வே துறையில் பல புதிய திட்டங்கள் இருந்தும், இங்கு ரெயில் பாதையை கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை.

    அதேபோல் மனித-விலங்கு மோதலுக்கு தீர்வு காணவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சட்டத்தில் திருத்தம் தேவை. இந்த விஷயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.
    • தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் என அறிவிப்பு.

    மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.

    அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    வத்திராயிருப்பு பகுதியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்்ப்பாட்டம் நடைபெற்றது. 

    அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் பெனரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் 
    எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    இதில் தர்மர், ஜெயக்குமார், கூடலிங்கம், மகாலிங்கம், பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×