என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "the road was arrested"
- மக்கள் மண்ணை ரோட்டில் கொட்டிய லாரியை சிறை பிடித்தனர்.
- டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சி பகுதியில் ஜல்லி கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிரசர்களில் இருந்து ஜல்லி கற்கள், ஜல்லி மண் ஆகியவற்றை செந்தாம்பாளையம், புலவனூர் ஆகிய ஊர்கள் வழியாக தினமும் ஏராளமான லாரிகள் கொண்டு செல்கிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பகல் 12 மணி அளவில் செந்தாம்பாளையம் வழியாக ஒரு டிப்பர் லாரி ஜல்லி கற்கள் கலந்த மண்ணை கொண்டு சென்ற போது லாரியின் பின்பக்க கதவை சரியாக மூடாததால் தார் ரோட்டில் நீண்ட தூரத்திற்கு ஜல்லி கற்களுடன் மண் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மண்ணை ரோட்டில் கொட்டிய லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த வழியாக வந்த மற்ற டிப்பர் லாரிகளையும் போக விடாமல் தடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது இனிமேல் ஜல்லி கற்கள் மற்றும் ஜல்லி மண் டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்லும் போது பாதுகாப்பாக கொண்டு செல்வதாக பொதுமக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்தனர்.