search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The son and daughter complaint"

    • தாயை கண்டுபிடித்து தரக்கோரி மகன், மகள் போலீசில் கண்ணீருடன் புகார் அளித்தனர்
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவரை தேடி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புதுஅழகாபுரியை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகனும், ஸ்ரீதேவி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற பரமேஸ்வரி மாயமானார்.

    தாய் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மற்றும் மகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் கூம்பூர் போலீசில் புகார் அளிக்க வந்தனர்.

    அங்கு அவர்கள் போலீசாரிடம் எங்களது தாயை தயவுசெய்து கண்டுபிடித்து தரவேண்டும். அவர் இல்லாமல் எங்களால் படிக்கவும் முடியாது, வாழவும் முடியாது என கண்ணீருடன் புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பரமேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    ×