search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruparappu Falls"

    • 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பாலமோரில் அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார், பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது. அணைக்கு 749 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 764 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.88 அடியாக உள்ளது. அணைக்கு 894 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையி லிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்1 அணை நீர்மட்டம் 14.73 அடியாக இருந்தது. அணைக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்2 நீர்மட்டம் 14.83அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.50 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது.

    • அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கார், வேன், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு மேல் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வருகிறார்கள்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறந்து வெளியேற்றப்பட்டது. இதனால் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    திற்பரப்பு பேரூராட்சி சார்பாக பல்வேறு வகையில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். தற்போது மழையின் தாக்கம் குறைந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கோடை கால விடுமுறை முடிய இன்னும் 5 நாட்கள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் காலை முதல் அருவியில் வந்து குளித்து செல்கின்றனர். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அருவி பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. தற்போது வியபாரம் சூடு பிடித்து உள்ளது.

    தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கார், வேன், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதனால் அருவியின் அருகில் நீண்ட வரிசையில் கார், வேன்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு மேல் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வருகிறார்கள். அருவியின் அருகில் இருக்கும் சிவன் கோவிலையும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சிற்றாறு போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதனால் அந்த பகுதிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    ×