என் மலர்
நீங்கள் தேடியது "Weather station"
- பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
- கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இன்னும் குளிர்காலம் போல கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
சில இடங்களில் காலை நேரங்களிலும் குளிர்ச்சி யான கால நிலை உள்ளது. அதேநேரம், விரைவில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் மாநிலத் தின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலம் வரும் போது அதிகப்பட்ச வெப்ப நிலை சீராக உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் துணை இயக்குனர் ராஜ் கூறுகையில், நகரின் மையப்பகுதிகளில் வடகிழக்கு காற்று கூறுகள் இல்லாதது மற்றும் நகர்ப்புற வெப்பத்தின் தாக்கம் ஆகியவை கடந்த 6 ஆண்டுகளில் இயல்பான அல்லது குறைந்த வெப்பநிலைக்கு பங்களித்த காரணங்களாக உள்ளது என்றார்.
2011 மற்றும் 2014-க்கு இடையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இரவு நேர வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரவு வெப்பநிலை சாதாரணமாக 20 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.
- பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மதுரை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ள நிலையில் தமிழ்நாட் டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரண மாக இன்றும், நாளையும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் கனமழை பெய் யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.
205 மி.மீ. மழை பதிவு
இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத் துடனும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களை தவிர மாவட்டம் முழுவதும் 205 மி.மீட்டர் மழை பதிவாகியுள் ளது.
இதில் அதிகபட்சமாக பேரையூரில் 103 மில்லி மீட்டரும், கள்ளிக்குடியில் 52.20 மில்லி மீட்டரும், எழு மலையில் 39.80 மீட்டர் மழையும் பதிவானது. மேலும் மதுரை விமான நிலையம், விரகனூர், சிட் டம்பட்டி, இடையபட்டி, கள்ளந்திரி, தல்லாகுளம், மேலூர், புலிப்பட்டி, தனியா மங்க லம், சாத்தையாறு அணைப்பகுதி, மேட்டுப் பட்டி, ஆண்டிப்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, குப்பனம் பட்டி, திருமங்கலம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் சார லுடன் கூடிய மழை பெய் தது. வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் அனை வரும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சம்பா, குருவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய மழை இல்லாததால் சம்பா குறுவை சாகுபடி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
வைகை அணையில் இருந்து குடிநீருக்காக மட் டுமே தண்ணீர் திறக்கப்பட்ட தால் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந் திருந்தது. இதனால் ஏற்பட் டுள்ள பொருளாதர இழப்பை சரி செய்யும் வகையில் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கண்மாய், கிணறு உள்ளிட்ட நீர் நிலை களில் தண்ணீர் வேகமாய் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணி களை மேற்கொள்ள விவசா யிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். தொடர் மழை யால் முல்லைப் பெரியாறு அணையில் 122.80 அடியும், வைகை அணையில் 55.09 அடியும், சாத்தையாறு அணையில் 17.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்து உள்ளனர்.