search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wine bottles smuggling"

      திருப்பூர்:

      திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் முறைகேடாக மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்தநிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுஜாதா உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்மணி ஆகியோரது தலைமையிலான போலீசார் மங்களம் சாலையில் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடுவம்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

      மதுவிலக்கு போலீசாரின் விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு (26) மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாபு (55) இருவரும் வஞ்சிபாளையம் ரத்தினபுரி கார்டன் அருகே உள்ள மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து இடுவம்பாளையம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 24 பெட்டிகளில் 1152 மதுபான பாட்டில்கள் மற்றும் 8 பெட்டிகளில் இருந்த 92 பீர் பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். முறைகேடக மது பாட்டில்களை கொண்டு சென்ற கருப்பு மற்றும் பாபுவை கைது செய்தனர்.

      இன்று மிலாது நபி பண்டிகையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்புதிருந்த நிலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

      புதுவையில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
      விழுப்புரம்:

      கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு அன்பரசன், போலீஸ்காரர் கார்த்திகேயன்மற்றும் போலீசார் ஆலாத்தூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

      அப்போது அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிளும், அதை பின்தொடர்ந்து மினி லாரியும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அவற்றை போலீசார் வழிமறித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

      இதையடுத்து மினிலாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 40 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மினிலாரியில் வந்தவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள மூரார் பாளையத்தை சேர்ந்த கமருதீன் (வயது 26) மற்றும் புதுவை நைனார் மண்டபத்தை சேர்ந்த வேலு (49) என்பதும் அவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

      இதைத்தொடர்ந்து கமருதீன், வேலு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அருசு என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
      ×