என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "without permission in"
- ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
- 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ப னை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெருந்துறை, தாளவாடி, சத்திய மங்கலம், பவானி போன்ற பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்த அனுமதி கொடுத்ததற்காகவும்,
அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
- ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் வரபாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடு முடி, ஈரோடு தாலுகா, டவுன், வெள்ளிதிருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கக்கூடல் கோபி, அந்தியூர் என்ன மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
இதில் அனுமதியின்றி மது விற்றதாக ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.