என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- புதிய மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் பெயருக்கு ஏற்றார்போல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்டிரீம் பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் 395 PPI வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் G06 பவர் ஸ்மார்ட்போன் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 50MP கேமரா, 7000mAh பேட்டரி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
புதிய மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் பெயருக்கு ஏற்றார்போல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்டிரீம் பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் 395 PPI வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.
பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்
இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
- இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.
- அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்.
இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த எட்டு மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் டவர்களும் 5ஜி-யாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் டவர்கள் அனைத்தும் 5ஜி-யாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்" என்றார்.
- இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல புதுமையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில், பயனர்களுக்கு அமேசான் பிரைமை வழங்கும் சில திட்டங்களும் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் ரூ.696 மற்றும் ரூ.996 விலையில் கிடைக்கின்றன. பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன.
இரு ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகின்றன. இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகளை தொடர்ந்து பாரப்போம்.
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள்:
வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கான அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் HD (720p) தரத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் அமேசான் தளத்தில் ஒரு நாள் இலவச டெலிவரி சேவைகளை பெறலாம். 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர், நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.
வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றுடன் பயனர்களுக்கு வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது.
- விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில், ஆப்களில் தனித்தனி ஆகும்.
- Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.
சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணைங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android ஆப்களில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது. இந்த நடைமுறை வருங்காலங்களில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு ஆகும்.
- உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வெற்றிகரமாக இன்று முதல் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கி உள்ளது.
இது பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு (25 வருடங்கள் நிறைவு) ஆகும்.
ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தன.
டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வதாக உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடி, ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுடன் சுதேசி '4G' சேவையையும் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு '4G' சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மக்களை கவரும் விதமாக ரூ.225க்கு 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.25 ஜிபி '4G' டேட்டா திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது.
- சியோமி பேட் 8 ப்ரோ மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கிறது.
- கேமராவை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி பேட் 8 மற்றும் சியோமி பேட் 8 ப்ரோ ஆகியவை நேற்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டேப்லெட்கள் ஸ்னாப்டிராகன் சிப்செட், 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 11.2-இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளன. இவை ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 மூலம் இயங்குகிறது.
புதிய டேப்லெட் ஸ்டான்டர்டு மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் கொண்டிருக்கிறது. சியோமி பேட் 8 ப்ரோ மாலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த இரு மாடல்களிலும் 67W வரை சார்ஜிங் மற்றும் 9,200mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சியோமி பேட் 8 ப்ரோ அம்சங்கள்:
சியோமி பேட் 8 ப்ரோ மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கிறது. இதில் 11.2-இன்ச் 3.2K (2136x3200 பிக்சல்) LCD ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட்மற்றும் TUV ரைன்லேண்ட் சான்றிதழ் கொண்டுள்ளது.
இந்த புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. அட்ரினோ GPU உடன் இணைந்து, 16GB வரை ரேம் மற்றும் 512GB வரையிலான மெமரியுடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி பேட்8 ப்ரோ மாடல் 5ஜி, ப்ளூடூத் 5.4, வைபை 7 மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. சியோமி பேட்8 ப்ரோ மாடல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9,200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி பேட் 8 அம்சங்கள்:
சியோமி பேட் 8 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதில் 13MP பிரைமரி கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் பேட்8 ப்ரோ மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 9,200mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் பேட் 8 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி பேட் 8, சியோமி பேட் 8 ப்ரோ விலை
சியோமி 8 ப்ரோ மாடலின் 8GB + 128GB மாடலின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 34,500) என தொடங்குகிறது. இதன் 8GB + 256GB மாடல் CNY 3,099 (இந்திய மதிப்பில் ரூ. 38,000), 12GB + 256GB மாடல் CNY 3,399 (இந்திய மதிப்பில் ரூ. 42,700), 12GB + 512GB மாடல் CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ. 46,000) மற்றும் 16GB + 512GB மாடல் CNY 3,899 (இந்திய மதிப்பில் ரூ. 48,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சியோமி பேட் 8 மாடலின் 8GB + 128GB மாடல் CNY 2,199 (இந்திய மதிப்பில் ரூ. 27,500) இல் தொடங்குகிறது. 8GB + 256GB மாடல் CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ. 27,700) மற்றும் 12GB + 256GB மாடல் CNY 2,799 (இந்திய மதிப்பில் ரூ. 30,600) விலையில் கிடைக்கிறது.
- இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது.
- லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வயர்லெஸ் கீபோர்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒளியை மட்டுமே சக்தியாகப் பயன்படுத்தும் ஒரு வயர்லெஸ் கீபோர்டு ஆகும். இந்த சாதனம் லாஜிடெக்கின் "லாஜி லைட்-சார்ஜ்" தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியிலிருந்தும் கூட ரீசார்ஜ் செய்ய முடியும்.
முழுமையாக சார்ஜ் செய்தவுடன், கீபோர்ட்டை நான்கு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த கீபோர்டில் உள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை சார்ஜ் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது.
இந்த கீபோர்டு முழு அளவிலான அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு மடிக்கணினியின் டைப்பிங் அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் சிசர்-ஸ்விட்ச் கீ வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை பல சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஈஸி-சுவிட்ச் கீ பயன்படுத்தி மூன்று சாதனங்களுக்கு மத்தியில் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கிறது.

லாஜிடெக் நிறுவனம் இந்த கீபோர்டின் வணிக மயமாக்கப்பட்ட சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. இந்த வெர்ஷன் 23 ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.
லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. யுனிவர்சல் மற்றும் மேகோஸ் மாடல்களின் விலை 99.99 டாலர்கள் ஆகும். இதன் வணிக மயமாக்கப்பட்ட வெர்ஷனின் விலை 109.99 டாலர்கள் ஆகும்.
- இயர்பட்களில் ஸ்வைப் வால்யூம் கண்ட்ரோல்களை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
- வரும் வாரங்களில் இந்த மாடல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயர்பட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி வருகிற 18ஆம் தேதி நத்திங் இயர் (3) ட்ரூ வயர்லெஸ் (TWS) இயர்பட்கள் அறிமுகம் செய்வதாக நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நத்திங் வெளியிட்டுள்ள டீசரில் புதிய இயர்பட்கள் வளைந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.
முன்னதாக இயர் (1) மற்றும் இயர் (2) மாடல்களுக்குப் பிறகு நத்திங் நிறுவனம் இயர் என்று பெயரிடும் திட்டத்திற்கு மாறியது, இப்போது நிறுவனம் பழைய படி பெயர்சூட்ட முடிவு செய்துள்ளது.
"இயர்(4)-க்கு என்ற பெயருக்கு மாறுவது குழப்பத்தை மட்டுமே உருவாக்கும், குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களுக்கு. எனவே மிகவும் தெளிவு மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வைக் கண்டறிந்தோம்," என்கிறார் குளோபல் ஸ்மார்ட் தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் தலைவர் ஆண்ட்ரூ.
இயர் (3) பல உயர்நிலை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்களில் காணப்படும் தொழில்நுட்பமான டூயல்-டிரைவர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மேம்பட்ட பேட்டரி ஆயுளுடன், மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் மிகவும் இயற்கையான சவுண்ட் டிரான்ஸ்பேரன்ஸி மோட், உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
கேஸ் மற்றும் இயர்பட்ஸ் இரண்டிற்கும் அதன் தனித்துவமான வெளிப்படையான வடிவமைப்பை எதுவும் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இயர்பட்களில் ஸ்வைப் வால்யூம் கண்ட்ரோல்களை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
புதிய இயர் (3) மாடல் செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் 2025 தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த மாடல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.
- டெஸ்லா இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையை தொடங்கியது.
- 2025-ல் 2500 கார்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் டெஸ்டா "Model Y" காரை அறிமுகம் செய்தது. இதற்கான புக்கிங் அதிக அளவில் இருக்கும் என மஸ்க் எதிர்பார்த்தார். ஆனால், சுமார் 600 கார்கள் மட்டுமே இதுவரை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டெஸ்லா காரின் விலை 69.75 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றால் புக்கிங் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வருடத்திற்கு 2500 கார்களை இறக்குமதி செய்ய டெஸ்லா முடிவு செய்துள்ளது. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் வரி விதிப்பால் 2025-ன் முதல் இரண்டு காலாண்டில் பிரீமியர் மின்சார கார்களின் விற்பனை 5 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. உலகளவில் 51 ஆயிரம் டாலர் முதல் 79 ஆயிரம் டாலர் வரையிலான கார்கள் வெறும் 2800 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
- உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.
செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.
இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.
சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.
"உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.
இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.
- பேட்டரிகளை 50 சதவீதம் சலுகையில் மாற்றிக் கொள்ளலாம்.
- ஆகஸ்ட் 30ஆம் தேதி வரைதான் இந்த சலுகை வழங்கப்படும்.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி முக்கிய இடம் வகித்து வருகிறது. குறைந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போனை தயாரிக்கும் நிறுவனம் சியோமி (Xiaomi) ஆகும்.
இந்த நிறுவுனம் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு50 சதவீதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றித் தரப்படும். ஆகஸ்ட் 25 முதல் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என சியோமி அறிவித்துள்ளது.
பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரம் என்ற பெயரில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.






