search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி ஜோடி வெற்றி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி ஜோடி வெற்றி

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்சின் ஆல்பனோ ஆலிவெட்டி ஜோடி, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்-அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடி, குரோசியாவின் மேட் பாவிக்-எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ ஜோடி மோதியது. இதில் இந்தியாவின் பாலாஜி ஜோடி 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    Next Story
    ×