search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்:  இத்தாலி வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதையடுத்து சுதாரித்த மேடிசன் கீஸ் 7-6 (8-6) என போராடி கைப்பற்றினார்.

    3வது செட்டில் இருவரும் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் இருக்கும்போது மேடிசன் கீஸ் விலகினார். இதனால் பவுலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், காலிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×