search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: ரிபாகினா, கிரெஜ்சிகோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: ரிபாகினா, கிரெஜ்சிகோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் காலிறுதியில் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு காலிறுதியில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கிரெஜ்சிகோவா 6-4, -6-7 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் எலினா ரிபாகினா, பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்திக்கிறார்.

    Next Story
    ×