உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் பகல் நேரங்களில் சாலையில் 2 குட்டிகளுடன் சுற்றி வந்த கரடி
- உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.
இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் குட்டியுடன் கரடி ஒன்று சுற்றி வந்தது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். கரடிகள் பொதுமக்கள் யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.