உள்ளூர் செய்திகள்

மஞ்சள் நோய் தாக்கிய சம்பா பயிர்கள்.

சம்பா பயிர்களை தாக்கும் புதிய வகை மஞ்சள் நோய்

Published On 2022-12-19 09:36 GMT   |   Update On 2022-12-19 09:36 GMT
  • சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
  • விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் மெலட்டூர், பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

நரியனூர் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் உள்ளது. தற்போது மஞ்சள் நோய் எனப்படும் புதிய வகை நோய் தாக்குதல் காரணமாக சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

எனவே, மஞ்சள் நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற அரசு வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News