உள்ளூர் செய்திகள்

கருப்பண்ணார் கோவில் திருவிழாவில் வேல் எடுக்கும் நிகழ்ச்சிக்கு இருதரப்பு போட்டி

Published On 2022-12-10 14:33 IST   |   Update On 2022-12-10 14:33:00 IST
  • இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
  • ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பா ளையத்தில் கருப்பண்ணார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்வாக வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இக்கோவில் பரம்பரை தர்ம கர்த்தாவாக கனகராஜ் என்பவர் இருந்து வருகிறார்.

நீதிமன்றத்தில் அனுமதி

இந்த நிலையில் இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதையடுத்து வேல் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் வேல் எடுக்க அனுமதி பெற்ற மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வேல் எடுப்பதற்கும், திருவிழா நடத்துவதற்கும் பாதுகாப்பு கோரினர்.

பேச்சுவார்த்தை

அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், நீதிமன்ற உத்திரவின் படி மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழா நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழாவை தொடங்கினர். பின்னர் கனகராஜ் தரப்பினரும் தனியாக வேல் எடுத்துக் கொண்டு கருபண்ணார் கோவிலுக்கு சென்றனர்.

மேலும் கனகராஜ் தரப்பினர் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாரப்பன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கனகராஜ் தரப்பினர் வேலை கோவிலுக்கு வெளியே ஊன்றிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News