உள்ளூர் செய்திகள்

தார்சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புத்தூரில், சாலை தரமாக போடப்பட்டுள்ளதா? -அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-10-28 14:49 IST   |   Update On 2022-10-28 14:49:00 IST
  • சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.
  • தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவர்தெரு உள்ளது.

இந்த கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 400 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்த சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.

இந்த சாலை தரமாக உள்ளதா, முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று திடீரென சம்பவ இடத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் நேரில் சென்று புதியதாக போடப்பட்ட தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் தார் மற்றும் கருங்கல் ஜல்லிகளை வெளியே எடுத்து, தரமாக போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News