உள்ளூர் செய்திகள் (District)
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் முதியவர் பிணம்
- முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது.
- அழுகிய நிலை பிணமாக கிடந்தவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அடுத்துள்ள முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்த முட்புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். முதல் கட்ட விசாரணையில் அழுகிய நிலை பிண மாக கிடந்தவர் அப்ப குதியில் பிச்சை எடுத்து வந்தவர் எனவும், அவரை பற்றிய வேறு தகவல் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.