உள்ளூர் செய்திகள்

குமரியில் பரவலாக மழை

Published On 2023-04-28 06:37 GMT   |   Update On 2023-04-28 06:37 GMT
  • சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
  • அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரு கிறது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து இரவு நேரங் களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

அடையாமடை, கோழிப் போர்விளை, முள்ளங்கினாவிளை, இரணியல், புத்தன்அணை, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதி களில் பரவலாக சாரல் மழை பெய்தது. அடையா மடையில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவு கிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியல் குளிப்ப தற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

அணைகளுக்கும் மித மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 36.35 அடியாக இருந்தது. அணைக்கு 178 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக் களின் குடிநீருக்காக 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 2.6, பூதப் பாண்டி 5.2, கொட்டாரம் 3.8, நாகர்கோவில் 1.4, புத்தன் அணை 4, சுருளோடு 1.6, தக்கலை 1.2, இரணியல் 6.4, பாலமோர் 1.4, மாம்ப ழத்துறையாறு 2, ஆரல் வாய்மொழி 1.2, கோழிப் போர்விளை 13.4, அடையா மடை 22, முள்ளங்கினவிளை 12.8, ஆணைக்கிடங்கு 1.2, முக்கடல் 1.4.

கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிர மாக ஈடுபட்டு உள்ளனர். சுசீந்திரம், தேரூர், அருமநல்லூர், பூதப்பாண்டி, தக்கலை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வயல் உழவுப்பணி மற்றும் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு தேவை யான விதை நெல்களை தங்குதடை இன்றி வழங்க வும் அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ள னர். இந்த ஆண்டு மாவட் டம் முழுவதும் 6,500 ஹெக்டோரில் கன்னி பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News