உள்ளூர் செய்திகள்

மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் முன்பு சிறுமி செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.

கலைஞர் நூலகம்: சுற்றுலா தலம் செல்வது போல் இரவிலும் படையெடுத்த மக்கள்

Published On 2023-07-15 08:25 GMT   |   Update On 2023-07-15 08:25 GMT
  • பொதுமக்கள், கலைஞர் நூலகத்திற்கு சுற்றுலா தலம் செல்வது போல் இரவிலும் படையெடுத்தனர்.
  • குழந்தைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மதுரை

மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டில், 8 தளங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கலை–ஞர் நூற்றாண்டு நூலகம் உலகம் தரம் வாய்ந்த அள–வில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெறு–கிறது.

இந்நிலையில் பிரமாண்ட–மாக கட்டப்பட்டுள்ள கலை–ஞர் நூலக திறப்பு விழாவை முன்னிட்டு நூலகத்தை சுற் றிலும் லேசர் ஒளிரும் விளக்குகளாலும், நூலகத் தில் சுற்றுச்சுவர் தொடங்கி நூலகத்தில் சுற்று வட்டார பகுதி முழுவதும் வண்ண, வண்ண அலங்கார விளக்கு–களால் அலங்கரிக்கப்பட்டுள் ளது.

இதனால் இரவில் மின் னொளியில் ஜொலித்த தென்னகத்தின் புத்தக களஞ்சியமாக மாறியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தின் வெளிப்புறத்தை கண்டு ரசிக்க ஏராளமான பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் இரவிலும் சுற்றுலா தலங்களுக்க செல் வதுபோல் படையெடுத்து வந்தனர். ஒவ்வொருவரும் மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூலகத்தின் முன் பாக குழந்தைகள், குடும்பத் தினருடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

இன்று மாலை திறக்கப்ப–டவுள்ள நிலையில் குழந்தை–களுக்கான பிரத்யேக நூலக பிரிவு உள்ளே வாகனங்க–ளுடன், விமானத்தில் அமர்ந்து படிப்பது போன் றும், இயற்கை சூழலி்ல் படிப்பது போன்ற அமைப்பு–களும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் உரை–யாற்றுவது போன்ற தொழில் நுட்பத்தில் உரு–வாக்கப்பட்ட மெய்நிகர் அறையும் உள்ளது.

அதனை காண்பதற்காக–வும், கலைஞர் நூலகத்தில் உள்ள லட்சக்கணக்கான நூல்களை பார்க்கவும், படிக்கவும் ஆர்வத்தோடு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்தி–ருக்கி–றார்கள்.

Tags:    

Similar News