உள்ளூர் செய்திகள் (District)

கோவை வழியாக திருப்பதிக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில்

Published On 2023-08-19 09:25 GMT   |   Update On 2023-08-19 09:25 GMT
  • கேரளாவில் இருந்து புறப்பட ஆலோசனை.
  • கொங்கு மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ேகாவை,

கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் 3 நாட்களில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது கொங்கு மாவட்டத்தை சேர்ந்த பயணிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அந்த நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு சென்று பயணம் சென்று திரும்புகின்றனர்.

கோவை-திருப்பதி ரெயிலில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்வதால், அந்த ரெயிலில் சீட் கிடைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது. எனவே திருப்பதிக்கு மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கொங்கு மண்டல பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில் ஒன்றை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்கு மத்திய ரெயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்து உள்ளது.

அதன்படி 21 பெட்டிகளுடன் கூடிய அந்த சிறப்பு ரெயில் கொல்லத்தில் இருந்து புதன், சனிக்கிழமைகளில் மதியம் புறப்பட்டு, கோவைக்கு மாலை 6 மணிக்கு வரும். அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு திருப்பதி செல்லும்.

அதேபோல மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மதியம் 2.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவை வந்தடையும்.

கொல்லம்-திருப்பதி இடையேயான சிறப்பு ரெயில் மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சித்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது, கொங்கு மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News