உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் பேசிய காட்சி.

பாவூர்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

Published On 2022-12-17 08:40 GMT   |   Update On 2022-12-17 08:40 GMT
  • அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
  • பொதுக்கூட்டத்தில் பாண்டித்துரை, அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் பாவூர்சத்திரத்தில் தி.மு.க.முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஜேசு ராஜன், ஷேக் தாவூது, சுந்தர மகாலிங்கம், தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, ஷெரிப், அப்துல் காதர், ரஹீம், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சமுத்திரபாண்டி, கதிர்வேல் முருகன், சாமிதுரை, தமிழ்ச்செல்வி, ஆர்.கே. காளிதாசன், சேவியர் ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சீனித்துரை வரவேற்று பேசினார். கம்பம் பாண்டித்துரை, மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சிவன் பாண்டியன், ரவிசங்கர் ஒன்றிய குழு தலைவர்கள் காவேரி, திவ்யா மணிகண்டன், சேக் அப்துல்லா, கடையநல்லூர் சேர்மன் மூப்பன் ஹபிபூர் ரகுமான், நகரச் செயலாளர்கள் சாதிர்,ஜெயபாலன் பேரூர் மன்ற தலைவர்கள் சின்னத்தாய், வேணி, காளியம்மாள், சுதா, சுந்தர்ராஜன், பி.எம்.எஸ். ராஜன் மற்றும் தி.மு.க. பிரதிநிதிகளான மதிச்செல்வன், குருசிங் செல்வராஜ், விஜயன், செந்தூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News