உள்ளூர் செய்திகள்

விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ், மாணவி ஒருவருக்கு பரிசு கேடயம் வழங்கிய காட்சி.

தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

Published On 2023-01-29 09:15 GMT   |   Update On 2023-01-29 09:15 GMT
  • முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது.
  • கலெக்டர் செந்தில்ராஜ் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, சென்ற ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, தலைமை உரையாற்றினார்.

பள்ளி தாளாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் டேவிட் நன்றி கூறினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News