உள்ளூர் செய்திகள்
- 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்
- ஜெயிலில் அடைப்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 60).
இவர் வீட்டின் அருகே விளை யாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வந்து தனது தாயிடம் தெரிவித்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆரோக்கியதாசை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ஆரோக்கியதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தார்.