உள்ளூர் செய்திகள்
- சிறுவன் மாயமானார்.
- ஆலங்குளம் போலீசில் பண்டாரசாமி புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டி.கரிசல் குளத்தை சேர்ந்தவர் பண்டாரசாமி (வயது 54). இவரது பேரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
அவன் வீட்டில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்து விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பண்டாரசாமி சிறுவனை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவன் வீட்டில் இருந்து மாயமானார். அவன் எங்கு சென்றான் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பேரனை கண்டுபிடித்து தருமாறு ஆலங்குளம் போலீசில் பண்டாரசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.