உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அருண்தம்புராஜ்.

கோடை வெயில் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள் - கலெக்டர் தகவல்

Published On 2023-04-16 14:36 IST   |   Update On 2023-04-16 14:36:00 IST
  • கோடைவெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
  • கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும்.

சுற்றுப்புற வெப்பநிலை நமது உடலின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஒட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி சராசரி வெப்பநிலையில் பாதுகாக்கிறது.

கோடைவெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை, அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைபிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும்.

தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்துக்கொள்ளுவது நல்லது, சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.

உப்பு கலந்த மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை, பழச்சாறு, இளநீர், உப்பு கரைசல் ஆகியவற்றை தண்ணீர் தாகம் எடுக்கும் போது பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News