சுகாதார செவிலியர் பணி வழங்க மறுப்பு- தி.மு.க. அரசுக்கு சீமான் கண்டனம்
- செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
- அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது காலியாக உள்ள 2500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு தம்முடைய பிடிவாதத்தை இனியேனும் கைவிட்டு, செவிலியர் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.