search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முக்கியமான வீரர்களை கைவிடுகிறதா பிசிசிஐ?
    X

    முக்கியமான வீரர்களை கைவிடுகிறதா பிசிசிஐ?

    • உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்ப தாமதம் ஏற்பட்டது.
    • அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே, அவர்களுக்கு பதிலாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றதன் அடிப்படையில் ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால், முன்னணி வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் போன்றோரை சேர்க்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் வரை இந்திய அணியின் அனைத்து வடிவ வீரராக இருந்த இஷான் கிஷன், பிசிசிஐயிடம் ஓய்வு கேட்டார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கும், டி20 உலகக் கோப்பை 2024 அணித் தேர்வுக்கும் இடையில் நிறைய நடந்தது. இது மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரை ஓரங்கட்டி வைக்க தேர்வாளர்களைத் தூண்டியது.

    இஷான் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டுமெனில் ஜார்க்கண்டிற்காக ரஞ்சி டிராபி மற்றும் வேறு சில உள்நாட்டு போட்டிகளில் விளையாடும்படி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஐ.பி.எல். தொடருக்காக ஹர்திக் பாண்ட்யாவுடன் பயிற்சிபெற முடிவு செய்திருந்தார்.

    இஷான் கிஷனின் இத்தகைய நகர்வு பிசிசிஐ முதலாளிகள் மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கு அவரைத் தேர்வு செய்யாத தேர்வாளர்களுடன் சரியாகப் போகவில்லை. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இஷான் கிஷனை விட பந்தயத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    இதேபோல கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 7 வீரர்களிடமும் இதேபோன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.

    Next Story
    ×