search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நிதிஷ் ராஜகோபால் அதிரடியில் திரில் வெற்றி பெற்றது நெல்லை
    X

    நிதிஷ் ராஜகோபால் அதிரடியில் திரில் வெற்றி பெற்றது நெல்லை

    • முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய நெல்லை அணி 168 ரன்களை எடுத்து வென்றது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார்.

    நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அருண் கார்த்திக் 10 ரன்னில் அவுட்டானார்.

    அஜிதேஷ் குருசாமி அதிரடியாக ஆடி 14 பந்தில் 30 ரன் எடுத்தார். அருண்குமார் 6 ரன்னிலும், சோனு யாதவ் 1 ரன்னிலும், ஈஸ்வரன் 9 ரன்னிலும், கிருபாகர் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மோகித் ஹரிஹரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசியில் அதிரடியாக ஆடிய ராஜகோபால் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் நெல்லை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    Next Story
    ×