என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர்: கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோலி, ரோகித், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20-ஐ தொடருக்கான இந்திய அணி:-
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய்.