search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா18-ந்தேதி நடக்கிறது
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா18-ந்தேதி நடக்கிறது

    • பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது.
    • 19-ந்தேதி அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், மாலை 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷம், இரவு 8.30 மணிக்கு முதல் காலம், இரவு 11.30 மணிக்கு 2-ம் காலம், லிங்கோத்பவர் அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜை நடக்கிறது.

    முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தேவாரம்- திருவாசகம் இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 4-ம் காலம், 5.30 மணிக்கு அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் சிவக்குமாா் மற்றும் பலா் செய்துள்ளனா்.

    Next Story
    ×