என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5 ஆயிரமாக உயர்வு: நாளை முதல் அமல்
- 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 சண்முகார்ச்சனைக்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
- பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்தி நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில் மூலம் சண்முகார்ச்சனை நடத்த கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.5 ஆயிரம் என உயர்த்தி சட்டவிதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து ஆட்சேபனை ஏதும் வரப்பெறாத நிலையில், கோவில் அறங்காவலர் குழு சுற்று தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.5,000 என உயர்த்தப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் கோவில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.
ஆகவே, பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.5,000 கட்டணத்தை செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்