search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக மார்கிஸ் நியமனம்
    X

    இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக மார்கிஸ் நியமனம்

    • உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது.
    • இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3-வது சுற்றுக்கு வரத் தவறியது. கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை நியமனம் செய்தது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு.

    மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×