search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    ஓய்வு முடிவை அறிவித்த ரியல் மாட்ரிட் கிளப் வீரர் டோனி க்ராஸ்
    X

    ஓய்வு முடிவை அறிவித்த ரியல் மாட்ரிட் கிளப் வீரர் டோனி க்ராஸ்

    • ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகள் விளையாடி உள்ளார்.
    • 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ்.

    யூரோ 2024 தொடருக்கு பின் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேர்மனி வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ் (34). ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி க்ராஸ் 17 கோல்கள் அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகளும் (22 கோல்கள்), பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளும் (13 கோல்கள்), பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளும் (10 கோல்கள்) விளையாடியுள்ளார்.

    இவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து க்ரூஸ் கூறியதாவது:-

    ஜூலை 17, 2024-ல் ரியல் மாட்ரிட்டில் நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாள். ஒரு மனிதராகவும், கால்பந்து வீரராகவும் மாற்றியது. இது உலகின் பாரிய கிளப் அணியில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீஸனின் முடிவில் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.

    என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    என அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×